launchora_img

Tamil stories

Info

Memoir. 1

Spirituality calling. .,

கும்பகோணம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி , தாராசுரம் அருகே , தாராசுரம் வழி பட்டீஸ்வரம் கோயிலுக்கு போகும் முகப்பில் ஐராதீஸ்வரர் கோயில் பின்புறம் அமைந்து உள்ளது அருள்மிகு பத்ர காளி அம்மன் உடனுறை அருள்மிகு வீர பத்திரர் திருக்கோயில் .

இந்த திருத்தளம் குடந்தையில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் அமைந்து உள்ளது .

நான் நடை பழக்கமாக தினமும் ஐரா தீஸ்வரர் கோயிலுக்கு செல்லுவது வழக்கம் , அவ்வாறு செல்லும் பொழுது இந்த கோயிலை வெளியில் இருந்து பார்த்து இருக்கிறேன் .

கோயில் பழமையானது என்பதற்கு பல அறிகுறிகள் தென்பட்டன.

பாழ் அடைந்த கோபுரம் , ஆனால் சீரடைந்து வருகிறது. இதற்கு காரண கார்த்த அங்கு வசிக்கும் ஒரு பக்தர் .

அவ்வாறாக நான் , ஒரு நாள் காலை சென்ற போது , கோயிலை தரிசிக்கும் வாய்ப்பு கிட்டியது .

பூசாரி அவர் வேலையை பார்த்துக் கொண்டு இருந்தார் . நான் கோயில் மூலவரை வணங்கினேன் . பிறகு பின்புறம் சென்ற போது , என்னை கூப்பிட்டு , அங்கே இருப்பது ஒட்டக்கூத்தர் சமாதி என்றும் , அவர் அங்கே சித்தமாகி இருக்கிறார் என்று கூறினார் .

சித்தர் பீடம் மூலஸ்தானத்தில் இருந்து சற்று தெற்கே அமைந்து உள்ளது. சித்தர் பீடத்தை சுற்றி புது சமாதி அமைத்து இருந்தார்கள் .

கவிச்சக்ரவர்தி , இங்கே அமர்ந்து பல பாடல்களை பாடி இருக்கிறார். அதில் இந்த ஊரைப் பற்றிய குறிப்புகளும் பல உள .

இதில் உள்ள உண்மையை என்னால் உணர முடிந்தது . கால காலமாக தமிழை வளர்த்த புலவர்களுக்கு பொற்குவியலை அரச மாமன்னர்கள் கொடையாக கொடுத்ததும் , மேலும் அருள் வாக்கு பெற்றதும் , அந்த சிந்தனையில் கிடைத்த கருவூலங்கள் நமக்கு புதுப் புது அர்த்தங்களையும் , வாழ்வியலையும் என்றென்றும் பறை சாற்றிக் கொண்டு இருக்கின்றன.

கவியை வணங்கி சற்று முன்னோக்கி நடந்தேன் . அங்கே வடக்கே ஒரு உயர்ந்த புற்றும் , அதைச் சுற்றி ஒரு வளைவான பிரகாரமும் என்னை வரவேற்றன .

சுற்றி வந்து அமர்ந்தேன் . தியாணம் செய்தேன்.

கடைசியாக பூசாரி நீலகண்டனிடம் ( 8680828922) உரையாடினேன் .

அது அகஸ்தியரின் சிஸ்யர் ஸ்ரீ ரெவன சித்தர் அடக்க மாகிய இடம் என்று கூறினார் .

பிரமிப்புடன் சென்ற எனக்கு பல கேள்விகள் எழுந்தன . எல்லாவற்றிற்கும் ஆன பதிலை அவரிடன் தேடிக் கொண்டேன்.

இந்த கோயிலைப் பற்றி என்ன எழுதுவது என்ற எண்ணம் உதித்த பொழுது என்னிடம் எந்த குறிப்பேடும் இல்லை.

இப்படி சொல்ல எனக்கு எந்த அதிகாரமும் இல்லை என்பதற்கு பிறகு நடந்த ஒரு சம்பவம் .

பூசாரியை சந்தித்தேன் . உரையாடினேன் . விடை பெற்றேன் . அவர் அங்கு உள்ள கலசத்கிற்கு வர்ணம் இட பணம் தேவைப் படுகிறது என்று கூறினார் . என் மனதில் அதை உள் வாங்கிக் கொண்டேன் .

எப்படி என் எண்ணங்களை பகிர்வது என்று நினைக்கும் பொழுது என் பார்வை விரிய வில்லை .

ஆனால் அந்த எண்ணம் மட்டும் என் இதயத்தை சற்று உருத்திக் கொண்டே இருந்தது என்று தான் சொல்ல வேண்டும் .

நான் பார்த்தேன் , ஆனால் புரிதல் இல்லை .

புரிதலுக்கு தேடுதல் அவசியம் என்பது மட்டும் என் எண்ண ஓட்டமாக இருந்தது.

ஓட்டத்தை முன் நிறுத்தினேன் . எண்ணங்கள் குவியலாகின.

குவியலை சரி செய்தேன் . சரி செய்ததின் விளைவு நான் உங்களிடம் பகிர்ந்து கொண்டு இருக்கிறேன் .

விளைவை நோக்கிய பயணம் தொடரும் ......,,,,




Memoir.  2

பிறந்ததும் பறக்கின்றன ,,

வாழ்கையை கொண்டாட. ,,,,

-​ ஈசல்கள் ..

Today USSR celebrates the greatest Russian leader of all times - the great LENIN on his birth.

LONG LIVE "EGALATORIAN " THOUGHTS OF LENIN.

please note : He got inspiration from the great American writer - Jack London,​ his short story titled " THE WOLF AND THE OLD MAN ".


Memoir  3

Bull Fight.​ 

பாலுவுக்கு ஒரு வருத்தம் . தனது நண்பன் குணா இருக்கும் போது அப்பா தன்னை திட்டிவிட்டார் என்று .

அதுவும் ஒன்பதாவது வகுப்பின் கால் ஆண்டு தேர்வில் 25 மார்க் ஆங்கிலத்தில் வாங்கியதற்கு .

அந்த நிகழ்வு நடந்து 30 வருடங்கல் கடந்து ஓடின.

பாலு வங்கியில் பணி புரிந்து ஓய்வு பெற்றான் .குணா ஆசிரியர் பணியில் சேர்ந்து ஓய்வு பெற்றான்.

பாலுவும் , குணாவும் தற்செயலாக ஒரு புத்தக கண் காட்சியில் சந்தித்து கொண்ட னர்.

" எப்படி இருக்கு வாழ்க்கை "

"மாடு மேய்த்து இருந்தால் நன்றாக இருந்து இருப்பேன் ".

" ஏய் என்ன சொல்ற "

"ஆமாம் , உடம்புக்கு எல்லா நோயும் வந்துவிட்டது " .

'என்ன ஆச்சு ' குணா வினவ , சற்றும் எதிர் பார்க்காமல் பேச ஆரம்பித்தான் பாலு ,

பிடித்த தொழிலை விட்டு , கிடைத்த தொழிலுக்கு சென்றால் விளைவு என் மாதிரி தான் இருக்கும் .

சுருக்கமாக சொன்னால் , மாடு மேய்த்து இருந்தால் நன்றாக இருந்து இருப்பேன் .

என் அப்பா மாட்டு தொழுவம் கட்டி 2O மாடுகளை வளர்த்தார் . அவரிடம் உண்மை இருந்தது . உழைத்தார் உயர்ந்தார் .

படித்த என்னை , மதித்தார் . ஆனால் என் எண்ணங்களை புரிந்து கொள்ளவில்லை .

ஆனால் என்ன . சமுதாயத்தில் நான் ஒரு Retired Hurt Bank General Manager .

50 வயதில் , உடல் நலம் காரணம் காட்டி ஓய்வு பெற்றேன் .

என் அப்பாவோ , இன்று உலக புகழ் பெற்று விட்டார் .

அவர் வளர்த்த காளை , அலங்கா நல்லூர் ஜல்லி கட்டில் CAR வென்று முதல் பரிசும் பெற்றது.

அவர் மாடு வளர்ப்பை தொழிலாக செய்யாமல் , அந்த வாழ்க்கையாகவே மாறினார்.

எனக் கோ , !!!! ????அந்த கோ ,!!!!????

நண்பன் அழுதான் .

நான் சிரித்தேன் .

அப்பா என் முன்னனே தோன்றி மறைந்தார் .

--Best Regards,

Selvaraj Ramanselvaraj.raman1961@my.com-

Memoir 4

கனா கண்டேன்!!​ தோழி !!!

அவளுக்கு​ இது புதிதாக இருந்தது .அந்த அனுபவம் இது வரை அவளுக்கு ஏற்பட வாய்ப்பு இல்லை . இது என்ன , சபலமா , சஞ்சலமா , சங்கடமா .., என்ன ஒரு உபாதை .

உபாதை என்று சொல்வதை விட ஒரு உன்னத அனுபவம் என்று தான் சொல்ல வேண்டும் .

காரணம் , அவள் வீட்டுக்கு ஒரே பெண் குழந்தை . செல்லமாக வளர்ந்தவள். அப்பா தமிழ் ஆசிரியர் . அம்மா சும்மாவா . எல்லாம் அவள் தான் . ரொப்ப கெடுபிடி .

அடிக்கடி உலகம் கெட்டுப்​ போய் இருக்கிறது. ஜாக்கிரதை ,ஜாக்கிரதை என்று சொல்லி பள்ளி, வீடு என்று வளர்த்தவள் .

கடைசியாக ராமநாதபுரத்தில் இருந்து தஞ்சைக்கு தலைமை ஆசிரியராக மாற்றப்பட்டார் என் அப்பா .

வேறு வழி இன்றி அப்பா அரவணைப்பில் இருந்த நான் 10 வது வகுப்பில் Co - Ed School ல் சேர்க்கப்பட்டேன்.

பல நாட்கள் கடந்தது . தோழிகள் கிடைத்தனர் .பலர் தோழனுடன் சகஜமாக பழகினர் .

எனக்கோ பயம். அதை விட கூச்சம் என்று தான் சொல்ல வேண்டும் .

அப்படி இருந்தும் சுரேஷ் மட்டும் என்​ 

மனதில் ,கற்பனையில் , கனவில் அடிக்கடி வருகிறான் .

அவன் அழகு இல்லை .நண்பர்களுடன் பார்ப்பது அரிது . தனிமை விரும்பியோ என்ற சந்தேகம் வேறு எனக்கு.

என்னைப் பார்த்து ஒரு நாள் , உணவு இடைவெளியில் கேட்டான் ." நீங்க பக்கத்து தெரு தமிழ் ஆசிரியர் பொண்ணு தானே".

" ஆமாம் " என்றேன் .நீ ." நான் ஒரே பையன் அப்பா கிடையாது .அம்மா வீட்டு வேலை செய்து என்னை படிக்க வைக்கிறாள் " .

எனக்கு அவன் மீது பரிதாபம் ஏற்படவில்லை. ஏனெனில் , அவனிடம் அந்த வெளிப்பாடு இல்லை.

'பின் ஏன் , நான் அவனை நினைக்க வேண்டும்'

எப்படி சொல்வது …,,,,

ஒரு முறை பள்ளி கவிதைப் போட்டிக்கு நான் தயார் செய்த ஒன்றை அவனிடம் கொடுத்து படிக்கச் சொன்னேன் .

படித்து விட்டு திரும்ப கொடுத்தான் .அதில் எந்த மாற்றமும் செய்யவில்லை - தலைப்பு தவற.

என்றும் வாஞ்சையுடன்​ - நான்

இதய வாசல் திறந்தது​ - அவன் .

" மனம் என்பது குரங்கு அல்ல ,

மானுடத்து மகுடம் !

அதற்கு பல பார்வை உண்டு …

காதல் , கனிவு , கருணை ,

கலக்கம் , கலங்கம் , கபடம் ,

கண்ணியம் - ஆனால் ,

உன்னைப் பார்த்தவுடன்​ 

நான் கற்றுக் கொண்டது -

காதல் மட்டுமே !!! "​ 

இதை சமர்பிக்க மனசு இல்லாமல் தன் இதயத்தில் சுமந்து கொண்டு வீடு சென்றாள் - சுதா .

தொடர்புக்கு

எண்ணம்,எழுத்து ,​ ​ ​ ​ ​ ​ ​ ​ : செரா ,

ஆக்கம்​ 

வணக்கம்​ ,

செரா ,

Selvaraj r

Sir,​ 

I am a retired banker with 35 years​ of experience with an interest to help your maatram in a small meaningful way

as much as I can.​ 

My blogs are from my heart,​ I am interested in journalism as well.​


Be the first to recommend this story!
launchora_img
More stories by Selva
வந்தாள் மகா லட்சும...

We are all humans , role reversal is universally accepted. The story is a figment of imagination.

00
The Panchayatraj

The very thought of creating an egalatorian society rests with formation of PanchayatRaj.

10

Stay connected to your stories

Tamil stories

80 Launches

Part of the Self-biography collection

Published on December 11, 2021

Recommended By

(0)

    WHAT'S THIS STORY ABOUT?

    Characters left :

    Category

    • Life
      Love
      Poetry
      Happenings
      Mystery
      MyPlotTwist
      Culture
      Art
      Politics
      Letters To Juliet
      Society
      Universe
      Self-Help
      Modern Romance
      Fantasy
      Humor
      Something Else
      Adventure
      Commentary
      Confessions
      Crime
      Dark Fantasy
      Dear Diary
      Dear Mom
      Dreams
      Episodic/Serial
      Fan Fiction
      Flash Fiction
      Ideas
      Musings
      Parenting
      Play
      Screenplay
      Self-biography
      Songwriting
      Spirituality
      Travelogue
      Young Adult
      Science Fiction
      Children's Story
      Sci-Fantasy
      Poetry Wars
      Sponsored
      Horror
    Cancel

    You can edit published STORIES

    Language

    Delete Opinion

    Delete Reply

    Report Content


    Are you sure you want to report this content?



    Report Content


    This content has been reported as inappropriate. Our team will look into it ASAP. Thank You!



    By signing up you agree to Launchora's Terms & Policies.

    By signing up you agree to Launchora's Terms & Policies.